நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள்

       நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் 

  



நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள்





FULL DETAILS - 

நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் : பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு...
     

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியபோது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.  
 
இதற்கான தயாரிப்பு செயல்முறை இந்த ஆண்டில் நடைபெறும் என்று பிரதமர் கூறியுள்ளார். 

மேலும், புதிய கல்வி மறுசீரமைப்பு ஐந்து பிரதான தூண்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 

இதற்கு அமைய, புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தல், மனிதவளத்தை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், பொது மக்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் உரிய மதிப்பாய்வு மேற்கொள்ளல் போன்ற பிரதான விடயங்களின் கீழ் இந்தக் கல்வி மறுசீரமைப்பு தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரையான மாணவர்களுக்காக 2026ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கல்வி, உயர்கல்வி மற்றம் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்ததாக ஆறு உப குழுக்களை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு அமைய, கல்வி மறுசீரமைப்பு, பாடசாலைகளில் காணப்படும் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகள், பாடசாலைகளில் இடைத்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதித்தல், கல்விச் சபையை நிறுவுதல், உயர் கல்விப் பிரிவு, திறன்கல்விப் பிரிவு ஆகியவற்றின் கீழ் ஆலோசனைக் குழுவுடன் இணைந்ததாக ஆறு உப குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த அமைச்சுத் தொடர்பில் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் காணப்படும் விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

   நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் 

No comments

Theme images by fpm. Powered by Blogger.